தீதும் நன்றும் பிறர்தர வாரா
தீதும் நன்றும் பிறர்தர வாரா...
நடந்ததை யோசிக்க
நடப்பவை தடையடா
நடக்கும் என்பது
விதியின் செயலடா...
நீ காட்டிய மாயை
உன்னை மாயமாக்கும் நிஜமடா…
நீ ஏமாற்றிய உலகம்
உன்னை ஏமாற்றும்
உனக்கான தருணங்களை
நீ எதிர் கொள்வது நிச்சயம்...
வெளிச்சம் தேடும் உலகில்
ஒரு கரிய இருட்டு
உன்னை துரத்தும்
வழி தேடிச் செல்லும்
வழியறியா பயணத்தின் தொடக்கமிது...