Sunday, February 12, 2017

இதுக்குலா தீர்வு என்னனு சொல்லலையே?

ஜல்லிக்கட்டு தடை, பொங்கல் விடுமுறை இந்த பிரச்னைலா ஒரு பக்கம்…

சின்னம்மாவா இல்லை தீபாவானு புலம்புகிற மக்கள் கூட்டம் ஒரு பக்கம் (சில திராவிட கட்சிகளைத் தவிர state LA leaders வேற யாரும் இல்லையானு கேட்காதிங்க… 8+ கோடி மக்கள் இருக்குற இந்த மாநிலத்துல எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு),
Disclaimer: #இதுஅரசியல்பதிவல்ல… :)

அரசு இயந்திரம் இயங்குதானே தெரியாத அளவுக்கு, இருக்குற இடம் தெரியாம இருக்குற ………. ஒரு பக்கம், 
Disclaimer: #இதுஅரசியல்பதிவல்ல… :)

என்ன பிரச்னை நடந்தாலும் ஒரு meme போட்டுட்டா அது சரியாயிடும்னு நினைக்கிற இளசுகள் ஒரு பக்கம்,
அந்த meme ah like & share பண்றதவிட நம்ம வேலை முடிஞ்சுச்சுனு நினைக்குற நாம ஒரு பக்கம்,

[எந்த பிரச்னை வந்தாலும் நகைச்சுவையா meme போட்டுட்டு அந்த பிரச்னைக்கான தீர்வை ஆராயாமல் அடுத்த பிரச்னை பற்றி meme போடுறது (meme counts தான் அதிகமாகுது. I mean problems count. But there is no solution for a single issue).]

Dubsmash பேர்வழிகள் இன்னொரு பக்கம் (முதல் நடிப்பு தான் என்றுமே சிறந்தது என்பது என் அபிப்ராயம்),

யாரு எப்பிடி போனா நமக்கு என்னனு இருக்கிற சில உத்தமர்கள் ஒரு பக்கம்,
விஜய் & அஜித் படங்களுக்கு Like or comment nu post போடும் விசிறிகள் ஒரு பக்கம்,

ATM பிரச்னை (நம்ம state LA Dan இந்த பிரச்னை அதிகமா இருக்குனு நினைக்கிறேன். Because design apdi iruku), விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, School la L.K.G சேர்க்க 50,000 fees… etc etc.

இவ்வாறாக பல வித்தியாசமான மனிதர்கள், பிரச்னைகள் நிறைந்தது தான் இந்த சமூகம்.

இதுக்குலா தீர்வு என்னனு சொல்லலையே?

நான் தீர்வு சொல்றேனு சொல்லலையே. Solution கிடைச்சா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன். :)

-- கமல் சொல்ற மாதிரி மறதி நம் நாட்டின் தேசிய வியாதி.

சமூகவலை தள நண்பர்களுக்காக...

பொது இடங்களில் சொந்த மனைவியையோ பெண் பிள்ளைகளையோ “டி” போட்டு கூப்பிடுவது தவறு என்று தெரிந்த நாகரிக ஆண்மகன்களுக்கு,

சமூக, கலாச்சார பிரச்னைகளுக்கு ஒருத்தி கூறும் மாற்று கருத்துகளுக்கு அவளை கண்டபடி வசைபாடுவது தவறு என அவர்களுக்கு தெரியவில்லை.
அவளும் பெண்தானே?

கருத்து சுதந்திரம் ஒருவரின் கருத்தையோ, செயல்களை விமர்சிப்பதாக இருக்க வேண்டுமே தவிர அவரைப் பற்றிய சுய விமர்சனம் கூடாது.

முரண்பட்ட கருத்து தெரிவிக்கும் பெண்களைப் பற்றி வசைபாடும் சமூகவலை தள நண்பர்களுக்காக இந்த பதிவு.

History of Valentine’s day in Tamil

ரோமானியப் பேரரசில் பலவித போர்கள் நடந்து கொண்டிருந்ததால் ஆண்கள் திருமணம் செய்யக் கூடாது என்று அரசன் ஆணையிடுகிறான்.

Valentine என்கிற bishop தன்னை தேடி வந்த காதல் ஜோடிகளுக்கு அரசனின் ஆணையை மீறி ரகசியமாக திருமணம் செய்து வைக்கிறார். 

அரசனின் ஆணையை மீறியதால் Valentine-கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அங்குள்ள சிறைக் காவலாளியை பார்க்க வரும் காவலாளியின் மகளுடன் பிசப் valentine-கு காதல் ஏற்படுகிறது. 



(அந்த பெண் கண் பார்வையற்றவராக இருந்தார் என்றும்  bishop valentine பார்வை வர அருள் புரிந்தார் என்றும் ஒரு கதை உண்டு).

Valentine அரசனுடைய ஆணை தவறு என்பதில் உறுதியாக இருந்ததால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப் ப்டுகிறது. 

தண்டனையை நிறைவேற்றும் முன் அவருடைய கடைசி ஆசை என்னவென்று கேட்கப்படுகிறது.

அந்த farewell note-ல் “for your valentine” என்றவாறு தன் காதலிக்கு கடிதம் ஒன்றை எழுதி கொடுக்கிறார். மரண தண்டனையும் நிறைவேற்றப் படுகிறது.

#Valentine is believed to have been executed on February 14th, 270AD.